districts

img

பணி நிரந்தரம் கோரி டிவிஎஸ் தொழிலாளர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை, ஜூன் 3 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பவுண்டரி டிவி ஷனில் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் திங்களன்று (ஜூன் 3) நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சிஐடியு  ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பி. ரகுபதி தொழி லாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து  பேசினார். மேலும்  இதுகுறித்து தொழிலாளர்கள் பேசுகை யில், சோளிங்கர் டிவிஎஸ் பிரேக்ஸ் நிறுவனத்தில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வந்தோம். 10 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரப் படுத்துவதாக ஒப்பந்தம்  செய்திருந்த நிலையில்  தற்போது தொழிலாளர் களை வேறு ஒரு நிறுவனத் திற்கு, வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்வ தாக நிர்வாகம் மிரட்டி வரு கிறது. மேலும் நிரந்தரம் படுத் துவதாக கூறி ஒப்பந்ததாரர் கள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தற்போது  வேலை இல்லை  என்று சொல்லி கைவிரித்து  விட்டதாக  தொழிலாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்த னர். ஒப்பந்தத் தொழி லாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை சிஐடியு துணை நிற்கும் என ரகுபதி தெரிவித்தார்.

;