districts

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை

சென்னை,ஜூன் 5-

     அம்பத்தூர் ரயில் நிலையத்தின் 6-வது லெவல்-கிராசிங் பகுதியில் தற்போது  நடைமேம்பாலம் இருந்த இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை கட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    புதிதாக கட்டப்பட இருக்கும் சுரங்கப் பாதையில் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளை யும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   மேலும் அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதி யில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல  அனுமதிக்கலாம் என்றும் முடிவு செயப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த சுரங்க பாதையை  சற்று பெரிதாக கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் ரயில் நிலையத்தின் அருகில் மார்க்கெட் உள்ளது.

   இதனால் கனரக வாகனங்கள் அதிகம் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் சுரங்க பாதை வழியாக இயக்கப்படும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று அம்பத்தூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அத்தகைய வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் அம்பத்தூரில் இருந்து வெங்கடா புரம், கள்ளிக்குப்பம், கருக்கு, விஜயலட்சுமி புரம் மற்றும் மேனாம்பேடு பகுதிகளுக்கு செல்பவர்கள் மிக மிக எளிதாக செல்ல முடியும்.  

   அம்பத்தூரிலிருந்து இந்த பகுதிகளுக்கு  எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும். அம்பத்தூர் ரயில் நிலை யத்தில் கட்டப்படும் புதிய சுரங்கப் பாதையை  பெரிதாக கட்டினால் நிறைய வாகனங்கள் அந்த பாதையை பயன்படுத்தும். இதனால் அம்பத்தூரில் போக்குவரத்து நெரிசல் கணிச மாக குறையும். இதை கருத்தில் கொண்டு அம்பத்தூர் ரயில் நிலைய சுரங்கப் பாதையை  பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.