districts

img

பயிற்சி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

கடலூர்,ஜன.19- போராடிவரும் பயிற்சி மருத்து வர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 6 நாட்களாக இளநிலை பயிற்சி மருத்துவர்கள் சம்பளம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 2021 ஆம் மே மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டிலிருந்து, தமிழக அரசு சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையா கவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அங்கு பயிற்சி மருத்து வராக பணியாற்றி வரக்கூடிய மாணவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப் படாமல் உள்ளது. பத்து மாதங்களுக்கு முன்பு ரூ.3000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கட்டுப்பாட்டில் வந்த பிறகு அவர்களுக்கான ஊதியம் முழுவது மாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது எந்த விதத்திலும் பொருத்தமற்றது. கொரோனா சிகிச்சை பணி,  தடுப்பூசி முகாம்கள் என அனைத்து விதமான அரசு மருத்துவ நிகழ்வு களிலும் பங்கெடுக்கும் அந்த மாணவர்களுக்கு உடனடியாக உரிய ஊதியத்தை தமிழக அரசு எவ்விதமான நிலுவையும் இன்றி வழங்க வேண்டும்.  அதேபோன்று அங்கு பணி யாற்றி கொண்டிருக்கக்கூடிய முது நிலை மருத்துவ மாணவர்கள்  அந்தப் போராட்டத்திலே தற்போது இணைந்திருக்கிறார்கள். அவர்க ளுக்கும் 6 மாதங்களுக்கு மேலாக சம்பளம் நிலுவையில் உள்ளது. அவர்களுக்கு வழங்க வேண்டிய மாதம் 50 ஆயிரம் ரூபாயை உடனடி யாக வழங்குவதற்கு அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். போராடி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களை உடனே அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு மாதவன் தெரி வித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை  மீண்டும் தோல்வி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்க ளிடம் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷ், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பயிற்சி மருத்துவர்கள் எங்கள் கோரிக்கையை என்றைக்கு  நிறைவேற்றி தருகிறீர்கள் என்று அதனை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என்றார்கள்.  அவர்கள் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை வாய்மொழியாக தான் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை.    இந்த நிலையில் வரும் சனிக்கிழமை சுகாதாரத்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செய லாளர், நிதித்துறை செய லாளர் ஆகியோருடன் பயிற்சி மருத்து வர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த சென்னையில் கூட்ட ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோரிக்கை நிறைவேறும் வரை  பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.