districts

img

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஜூலை 27- உலகச் சதுரங்கப் போட்டியின் துவக்க விழா முன்னிட்டு இன்று (ஜூலை  28) நண்பகல் முதல் இரவு 9 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப் படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 44-வது உலகச் சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தைய்யா சாலை யில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் ஜூலை 28  மாலை நடைபெறுகிறது.  அந்த நிகழ்ச்சியில் பிரதமர் தமிழக ஆளுநர்,  முதல்வர், ஒன்றிய அமைச்சர் கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். எனவே சென்னைப் பெரு நகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.  இருப்பினும் நண்பகல் முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தைய் யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை,   மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையாச் சாலை வழியாக வும் அதுபோன்றே ஈவெகி சம்பத்  சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலி ருந்து ராஜா முத்தையாச்சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.  வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச்  சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி  இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல்  நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.  அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.  இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம். ஒன்றிய ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய பொதுமக்கள் அவர்கள துப் பயணத்திட்டத்தினை முன்கூட்டி யேத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.