சென்னை, மே 21 -
பட்டினப்பாக்கம் - நொச்சிக்குப்பம் இடையே வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலி யுறுத்தி ஞாயிறன்று ( மே 21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது.
பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையிலான லூப் சாலையில் மீன் விற்க அரசு நிர்வாகம் இடையூறு செய்து வரு கிறது. குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடி செய்கிறது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனையொட்டி இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது.
சீனிவாசபுரம் துவங்கி முள்ளிக்குப்பம், டுமிங்குப்பம் வழி யாக நொச்சிக்குப்பத்தில் இந்த இயக்கம் நிறைவடைந்தது. மறு குடியமர்வு திட்ட அடிப்படை யில் கட்டி முடிக்கப்பட்டு, மீத முள்ள 874 குடியிருப்புகளை நொச்சிக் குப்பம் மக்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த குடியிருப்புகளுக்கு பங்களிப்பு தொகையாக மீனவர்களி டம் 5.30 லட்சம் ரூபாய் வசூலிப்பதை கைவிட வேண்டும். மீன் வியாபாரிகளின் வாழ்வா தாரம் பாதிக்காத வகையில், லூப் சாலையில் அதே இடத்தில் நவீன மீன் அங்காடி கட்டித் தர வேண்டும். டுமிங் குப்பம், முள்ளிமா நகர் முதல் சீனிவாசபுரம் வரை யுள்ள சிதிலமடைந்த வாரிய குடியி ருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் 500 சதுர அடி பரப்பளவில் வீடுகளை புதுப்பித்து கட்டித்தர வேண்டும்.
திருமணமான அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் வகையில் புதிய குடியிருப்புகளை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை தலைவர்கள் வலியுறுத்தி பேசினர்.
கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலை மையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை, பட்டினப்பாக்கம் சீனி வாசபுரத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் ப.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயசங்கரன், எம்.சரஸ்வதி எம்.சி, பகுதிக்குழு உறுப்பினர்கள் மகேஷ், ரமேஷ், விஜயா, பாலகிருஷ்ணன், இமானுவேல், நொச்சிக்குப்பம் கிளைச் செயலாளர் அனபுரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.