சென்னை,மே 16-
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்தை கண்காணிக்க போக்குவரத்து காவல்துறை நவீன கேமிராக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் மற்றும் போக்குவரத்து வாகன டேஷ்போர்டில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதிக வேகம், ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறு மாறாக முந்தி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்காணித்து விதிமீறும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அபராதம் விதிக்க புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். இதில் தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும். அபராத சீட்டை பெற்றுக்கொண்டு இணைய தளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் அபராத தொகையை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.