திருவண்ணாமலை,பிப்.2- திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் மிகச் சிறந்த உணவாக விளங்கும் தரமான சாமை ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை வியாபாரி கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்று மதி செய்து வருகின்றனர். பழைய சாதம், கேழ்வரகு கூழ், சிறுதானிய உணவுகள், கீரை வகைகள் என எல்லாமே இயற் கையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. தற்போது அனைத்து தர மக்களும் நாகரிக உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் தென்னிந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. அதுமட்டுமா? ரத்த அழுத்தம், மலச்சிக்கல், மூட்டுவலி, உடல் பருமன் என வலி நிறைந்த வாழ்க் கையை வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சிகிச்சை பெற மருத்து வர்களை அணுகும் போது சிறு தானிய உணவுகளை அதிக அளவு சாப்பிட பரிந்துரை செய்கின்றனர். எனவே சிறுதானியத்தின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் பெரிதும் கண்டு கொள்ளாத சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளின் இன்று மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் சாதாரண பெட்டி கடை கள் முதல் சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் என எல்லா இடத்திலும் சிறுதானிய உணவுகளின் என தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் விற்பனையும் சக்கை போடு போடுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த சிறுதானிய உணவுகளை உற்பத்தி செய்வதில் தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை முன்னிலை வகித்து வருகி றது. இது பலருக்கும் தெரியாது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஒன்றியத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு சாமை பயிரிடப்படு கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 9 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜவ்வாது மலையில் மட்டும் தான் சாமை உற்பத்தி முன்னிலை வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் சாமை அரவை செய்யப்படாமல் நேரடியாக குஜராத், பீகார், மகா ராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு வெளியூர் வியாபாரிகள் விற்ப னைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 100 கிராம் சாமை அரிசியில் புரதம் 9.7, கொழுப்பு 5.2, பொட்டாசியம் 5.4, நார்ச்சத்து 7.6 ஆகியவை இருந்தால் நீரிழிவு நோயாளி களுக்கு மிகச்சிறந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.
பொதுவாக அரிசி உணவை அதிக அளவில் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஆனால் சாமை அரிசி உணவை வயிறு நிறைய சாப்பிட்டால் சர்க் கரையின் அளவு அதிகரிக்காது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட் டுள்ளது. மேலும், விவசாயத்தில் பூச்சி மருந்து பயன்பாடு ஜவ்வாது மலை யில் அறவே இல்லாத காரணத்தால் இந்தியாவில் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் சாமை உடலுக்கு கேடு விளைவிக்காத தரமானதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்திய அளவில் ஜவ்வாது மலை யில் உற்பத்தியாகும் சாமைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதே போல் கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகிய சிறுதானிய பயிர்கள் தலா 250 ஹெக்டேர் பரப்பளவில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஜவ்வாது மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு வரை தாங்கள் உற்பத்தி செய்த சாமையை வீட்டில் கைக்குத்தல் அரிசியாக மாற்றி சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஆனால் அவர்கள் உடல் ஆரோக் கியமும் நன்றாக இருந்தது. ஆனால் ஜவ்வாது மலையில் சாமை அரிசி அரவை செய்வதற்கான மில்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பெரும்பாலான மக்கள் இதனை ஒரு வர்த்தக பயிராக கருதி கிலோ ரூ.32க்கு அரவை செய்யாத சாமையை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் நெல் அரிசியை வாங்கி சாப்பிட தொடங்கி யுள்ளனர். ஆனால் அதே ஜவ்வாது மலையில் வெளியூரில் அரவை செய்து மீண்டும் கொண்டு வரப்பட்டு ஒரு கிலோ சாமை அரிசி ரூ. 100 விற்பனை செய்யப்படுகிறது. இதை இங்கு வரும் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.