districts

img

சிபிஎம் தளி ஒன்றிய குழு சார்பில் தீக்கதிர் 50 ஓராண்டு சந்தா வழங்கல்

கிருஷ்ணகிரி,டிச.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தளி ஒன்றிய குழு சார்பில் அரசியல் விளக்க பேரணி பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.  பொதுக் கூட்டத்திற்கு புருஷோத் தம ரெட்டி தலைமை தாங்கினார். தளி ஒன்றிய செயலாளர் ஆர். நடராஜன், மூத்த  உறுப்பினர் டி.எஸ்.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மூத்த தலைவர்கள் பி.நாகராஜரெட்டி,  பி.இளம்பரிதி  ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஜி.கே.நஞ்சுண்டன், கே.மகாலிங்கம்,சி. பிரகாஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,சி.பி. ஜெயராமன், லெனின் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா,சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தளி  ஒன்றிய குழு சார்பில் 50 ஓராண்டு தீக்கதிர் சந்தாவுக்கான தொகை 1 லட்சம் ரூபாயை மூத்த தலை வர்கள் டி. எஸ்.பாண்டியன்,பி.நாக ராஜ்ரெட்டி பி.இளம்பரிதி மற்றும் எம்.புருஷோத்தமரெட்டி  மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கி னர்.