மரக்காணம்,பிப். 7- பருவம் தவறி பெய்த கனமழை யால் மரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணி தற்போது துவங்கி யுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான உப்பளங்கள் உள்ளது. இந்த உப்பளங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பரில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கு வது வழக்கம். இங்கு பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. இதன் காரணமாக அப்பகுதியில் உப்புத் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. இந்த தொழிலில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இந்த, ஆண்டு பருவம் தவறி ஜனவரி மாதத்தில் கனமழை பெய்தது. இந்த கனமழை யால் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளித்தன. மழை நீரானது தற்பொழுது தான் வடிய தொடங்கியது. இந்நிலையில், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் உப்பு பாத்தி கட்டுதல், கால்வாய்கள் அமைத்தல், சேறு மிதித்தல் போன்ற பணிகளில் உப்பளத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில், மீண்டும் மழை பெய்யாமல் இருந்தால் வரும் 20 நாட்களுக்குள் உப்பு உற்பத்தி செய்யப்படும் என உப்பு உற்பத்தி யாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் உப்புத் தொழில் 6 மாதங்கள் மட்டுமே நடை பெறும். மற்ற ஆறு மாதங்கள் தொழி லாளர்கள் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் நிலை உள்ளது. இதனால், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ 5 ஆயிரம் வழங்கியது. ஆனால், இந்தத் தொகையானது கடந்த ஆண்டு அனைவருக்கும் கிடைத்தது. இந்த வருடத்திற்கான நிவாரணத் தொகை இதுவரையில் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். உப்பள தொழிலாளர்களின் நலன் கருதி விடுபட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை உடனடி யாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்