districts

சென்னை முக்கிய செய்திகள்

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் அடுத்தாண்டு நிறைவடையும்

புதுக்கோட்டை, அக்.5 - மதுரை ரயில்வே கோட்டத்தில் அம்ரித் திட்டத்தின்கீழ் 15 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள், அடுத்த ஆண்டில் நிறைவடையும் என்றார் தெற்கு ரயில்வே  மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வர்ஷவா.புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தின்கீழ் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வரும்  அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி களை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

சென்னையில் அயர்லாந்து கல்வி கண்காட்சி 

சென்னை, அக்.5-  அயர்லாந்தின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அயர்லாந்து கல்விக்கண்காட்சி சென்னையில்  சனிக்கிழமை (அக்,5) நடைபெற்றது. இந்த  கண்காட்சியை அயர்லாந்தில் கல்வி என்ற நிறுவனம் நடத்தியது.  2023 ஆம் ஆண்டில் 8,000 இந்திய மாணவர்கள் அயர்லாந்தை தங்களின் உயர்கல்விக்கான இடமாக தேர்வு செய்வதால், இந்த ஆண்டு அதை விட அதிகமான  மாணவர்கள் அந்நாட்டில் உயர்கல்வி கற்க செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஏற்ப இந்த கண்காட்சியில் அயர்லாந்தில் உள்ள முன்னணி 18 கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடினர். அயர்லாந்தில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங் களில் உள்ள படிப்புகள் மாணவர்களுக்கான விடுதி வசதிகள்  குறித்து விளக்கியதாக அயர்லாந்து கல்வி நிறுவனத்தின இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான மண்டல மேலாளர்  பாரி ஓ டிரிஸ்கோல் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி டெல்லி, புனே, மும்பை, பெங் களூரு ஆகிய நகரங்களிலும் கண்காட்சி நடைபெற வுள்ளது. பங்கேற்பாளர்கள் படிப்புகள் மற்றும் படிப்புக்குப்  பிந்தைய வேலை வாய்ப்புகள் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொண்டதாகவும் அவர்கூறினார்.  முன்னதாக, ஐரிஷ் விசா அலுவலகத்தால் வழங்கப்படும் ஆய்வு விசா விண்ணப்ப செயல்முறை குறித்த  கருத்தரங்கு நடைபெற்றது.

7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஆக்கி இந்தியா லீக்

ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதின. கடைசியாக 2017-ல் நடைபெற்ற தொடரில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் இத்தொடர் நடக்கவில்லை. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின், இதன் 6-வது சீசன், வரும் டிசம்பர் 28ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது.

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஆட்கள் தேர்வு

கடலூர், அக். 5- ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி மஞ்சக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வுக்கு 520 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 416 மனுக்களை பூர்த்தி செய்து வந்துள்ளன. அதில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு 350 பேர் வருகை புரிந்தனர்.‘ இவர்க ளில் 18 ஆண்களும் 2 பெண்க ளும் தேர்வு செய்யப் பட உள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ராம் மேற்பார்வையில், ஆயுதப்படை (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத் கான், துணை வட்டார தளபதி கலா வதி, ஆய்வாளர் அருள் செல்வன், ஆகியோர் தேர்வு குழுவாக செயல்பட்டனர். ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வில் உயரம், எடை, மார்பளவு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு, என பல கட்டங்களாக நடை பெற்றது .தேர்வு பெற்றவர்க ளுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கிரிக்கெட்  போட்டி

குவாலியர், அக்.5- மத்தியப்பிரதேச மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ளது குவாலியர். இங்கு 1978 ஆம் ஆண்டில் மைதானம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆக்கி விளையாடி வந்தனர்.  எனவே, இந்த மைதானத்திற்கு இந்திய வீரர் ரூப் சிங் பெயர் சூட்டப் பட்டது. பிறகு, 1988ஆம் ஆண்டில் முதல் முறை யாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.இந்தியாவை எதிர்த்து  மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்தியாவை கென்யா தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த மைதானத்தில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டி நடை பெற்றது. இந்தப் போட்டி யில்தான் சச்சின் டெண்டுல்கர் முதலாவது இரட்டை சதம் விளாசினார். அதன் பிறகு இந்த மைதானத்தில் ஒரு போட்டிக்கூட நடத்தப்பட வில்லை. இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைதானத்தில் டி 20 ஓவர் போட்டி ஞாயிற்றுக் கிழமை (அக்.6) அன்று இரவு 7 மணிக்கு நடைபெறு கிறது. இதில்இந்தியாவும் வங்கதேச அணியும் விளை யாடுகின்றன. இந்தப் போட்டி யில் இந்தியாவுக்கு அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கு வார்கள் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.