districts

img

ஒரே குடிசையில் ஒண்டுக் குடித்தனம் செய்யும் அவலம்

திருவள்ளூர், பிப். 3- ஒரே குடிசையில் ஒட்டுமொத்த குடும்பமே ஒதுங்கும் அவல நிலையை போக்க, லட்சிவாக்கத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள லட்சி வாக்கம் ஊராட்சியில் குளக்கரையில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலை முறைகளாக  குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் வசிக்கும் குடிசைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர், கிராம சபை கூட்டம், ஜமாபந்தி உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மனு அளித்தும் இதுவரை எந்த நட வடிக்கையில்லை.  மேலும் அண்மையில் உங்களை தேடி உங்கள் முதல்வர் முகாமிலும் மனு அளித்தனர். எனினும் வருவாய்த் துறையினர் கண்டு கொள்ளவில்லை. ரேசன் அரிசியை தவிர வேறு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்கிறார்கள். வருவாய்த் துறையினர் பட்டா வழங்காததால், தொகுப்பு வீடு கள் கிடைக்கவில்லை, இதனால் சுகா தார மான வாழ்க்கை வாழ முடிய வில்லை. அடிப்படை உரிமையான வீடே கிடைக்காததால் மழை காலத்தில் அரசு அமைக்கும் முகாம்க ளுக்கு கூட அதிகாரிகள் அழைப்பதில்லை. ஒரே குடிசையில் ஒட்டுமொத்த குடும்பமே ஒதுங்க வேண்டிய மோசமான நிலை உள்ளது என வேதனையுடன் கூறுகின்றனர். இந்த சூழல் மீண்டும் ஏற்பட கூடாது என்பதற்காக, லட்சிவாக்கம் ஊராட்சி யிலேயே கிராம நத்தம் ஏராளமான நிலங்கள் காலியாக உள்ளது. அங்கேயே வீட்டு மனைக்கான  பட்டாக்களை வழங்கி னால் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும். வேலைக்கு சென்றுவரவும் பாது காக்க இருக்கும் என்பதால் லட்சி வாக்கத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என இருளர் இன மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (பிப்.3), ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள துணை வட்டாட்சியர் ராமசிவம் என்பவரிடம்  மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, ஒன்றிய செயலாளர் கே.முருகன், சிபிஎம் வட்டச் செயலாளர் என்.கங்காதரன், கிளை செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.