districts

img

நில உரிமை பறிப்புச்சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும்

திருவள்ளூர், மே 2- நீர் நிலைகளை அழிக்க கூடிய, நில உரிமைகளை பறிக்கும் நில  ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு  அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். திருவள்ளூரில் 137ஆவது மேதின  ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் திங்களன்று சிஐடியு, ஏஐடியுசி இணைந்து நடத்தியது. சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே.கஜேந் திரன் ஆகியோர் தலைமை தாங்கி னார். இதில் விச மாநில தலைவர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், நில ஒருங்கிணைப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே  நிலம் எடுப்பதற்கு ஒன்றிய அரசாங் கம் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்துவதற்கு நிறைய சட்டங்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது.1894 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது முதல் முறையாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தனர்.  அந்த  சட்டம் ஆட்சியாளர்களுக்கு வானளா விய அதிகாரத்தை வழங்கி உள்ளது.  ஒரு நிலம் அரசுக்கு தேவைப்பட்டால் எந்தவிதமான ஒப்புதலையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. கையகப்படுத்திய நிலத்தை திருப்பி யும் தராது,  இழப்பீடு போதவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர லாம் அவ்வளவுதான். இதைத்தான் அந்த சட்டம் சொல்கிறது. இது ஏறக்குறைய 110  ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது.  அதன் பிறகு  விவசாயிகள் தொடர்ந்து போராடியதன்  விளைவாக “2013 நிலம்  கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும்  மறு குடியேற்றம் சட்டம்”  என்ற பெயரில்  ஒரு புதிய சட்டத்தை 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 1894 ம் ஆண்டு சட்டம் விவசாயிக ளுக்கு எந்த உரிமையும் வழங்க வில்லை. 2013 சட்டம் தான் நிலத்தை இழப்பவருக்கு மறுவாழ்வு, நிலத்தில் குடியிருந்தவருக்கு மறு குடியேற்றம் என்ற அம்சங்கள் எல்லாம் இந்த சட்டத்தில் தான் உள்ளது. ஆனால் இப்போது 2013 சட்டத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு,  தமிழ்நாடு அரசு சட்ட மன்றத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி  அன்று நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பது 1894 சட்டத்தைப் போல ஒரு  சட்டத்தை தான்,  தமிழக அரசு நில  ஒருங்கிணைப்பு சட்டம் என்ற பெயரில்  நிறைவேற்றியுள்ளது. அரசு சொல்லு கிற காரணம் சிறப்பு திட்டங்களுக்கு அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இந்த  சட்டம் தேவைப்படுகிறது என்கிறார் கள்.

பரந்தூர் விமான நிலையம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் இதனை  எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்ற னர் இது போன்ற சிறப்பு திட்டங்க ளுக்கு விவசாயிகளுக்கு சொந்தமான  நிலங்களாக இருந்தாலும் சரி ஏரி,  குளங்கள், கால்வாய்கள்,  ஆறுகள் இவற்றை எல்லாம் கைய கப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை அளிக்கும் சட்டம் தான் தற்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இனி 2013 சட்டப்படி விவசாயிகள் இழப்பீடு கேட்க முடியாது, சுற்றுச்சூழல் பாதிப்பு  என கேட்க முடியாது, நீர்நிலைகளை பாதுகாக்க முடியாது, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எடுக்க வுள்ள இடத்தில்13 ஏரிகள் உள்ளன. இதில் இப்போதும் நீர் நிரம்பி வழிகிறது.  இதனை அழிக்க அரசு நினைத்தால்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயி கள், கிராம மக்கள் ஏற்றுக் கொள்வார் களா,  ஆகவே தான்  சட்டப்படியா கத்தான் எடுக்கிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக எதேச்சதிகார  முறையில்,  நிலத்தை பறிப்பதற்காக இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது.  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடி யாக திரும்பப் பெற அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் வலுவாக ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்  என்றார். ரயில் நிலையம் அருகில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு  சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் கே.ரவி, சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம், துணை நிர்வாகிகள்   எம்.சந்திரசேகரன், மாயக்கண்ணன், சீனிவாசன்,  ரமேஷ், சுமதி,  சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் மயில்வாகனன், ஜெ.அருள், சரவணன்  உட்பட பலர் பேசினர்.