districts

img

தீக்குளித்து உயிரிழந்த ராஜ்குமார் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா

திருவள்ளூர், ஜூலை 10- கும்மிடிப்பூண்டியில் அண்மையில் தீக்குளித்து பலியான ராஜ்குமார் குடும்பத்திற்கு மாற்று இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்கிட வட்டாட்சியர் உறுதியளித்ததால் புதனன்று (ஜூலை 10), ராஜ்குமார் குடும்பத்தினர் அவரது உடலை பெற்று அடக்கம் செய்தனர். கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில்  குடியிருக்கும் வீட்டை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்குமார்  தீக்குளித்து உயிரிழந்தார். இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை, உரிய நிவாரணம், வழங்க வேண்டும் என்று வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் புதனன்று (ஜூலை 10), கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். மேலும் ராஜ்குமார் மனைவி நிவேதாவும்  அரசு வேலை, வீட்டு மனை, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனு அளித்தார். இந்த மனுக்களை பரிசீலனை செய்த வட்டாட்சியர் பா.சரவணகுமாரி ஆதரவற்ற நிலையில் உள்ள ராஜ்குமார் மனைவி நிவேதா குடும்பத்திற்கு மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். வேலை வாய்ப்பு மற்றும் நிவாரணம் குறித்து பரிசீலிணை செயது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அவரது உடலை வாங்கி அடக்கம் செய்ய சம்மதம் தெரி வித்தனர். இதில் சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பி னர் ஜி.சூரியபிரகாஷ், வட்ட குழு உறுப்பி னர்கள் ப.லோகநாதன், எம். ரவிக்குமார்,  டி.கோபாலகிருஷ்ணன், எம்.சி.சீனு, எம்.சிவகுமார், வி.ஜோசப், எம்.காமாட்சி, வி.குப்பன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் அப்துல்ரஜாக், முகமது சுல்தான், பயாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.