திருவண்ணாமலை, மே 8- திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மலையடிவாரத்திலுள்ள புனல்காடு கிராமத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அருகே தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கரில் மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து, மரங்களை அகற்றி, குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை மேற்கொண்டது. இதற்கு தேவனந்தல், அத்தியந்தல், புனல்காடு, கலர்கொட்டாய் உள்ளிட்ட பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இங்கு குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே குப்பைக் கிடங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனாலும், மாவட்ட நிர்வாகம் தனது பணிகளை நிறுத்தவில்லை. இதனால், கோபமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமையன்று (மே 6) அந்த இடத்தை சீரமைத்துக் கொண்டி ருந்த பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அதன்தொடர்ச்சியாக தென்னை, புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர். இந்நிலையில் திங்களன்று (மே 8) அங்கு சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை கைது செய்ய முயன்றனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் சென்ற கிராமக்கள் ஒப்பாரி வைத்தனர்.
சிபிஎம் கோரிக்கை
இந்த நிலையில், திரு வண்ணாமலை மலையடிவார கிரா மங்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை புனல்காடு கிராமத்தில் கொட்டும் மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை காவல் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் கேவல மாக திட்டியுள்ளனர். மக்களை பாது காக்க வேண்டிய காவல்துறை, கிராம மக்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. நகரம் மற்றும் கிராமங்களில் சேகரிக்கும் குப்பைகளை அந்தந்த பகுதியிலேயே கொட்ட வேண்டும். கிராம மக்களையும், விவசாயிகளை யும் பாதுகாக்கும் விதமாக, குப்பை கொட்டும் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் அணுக வேண்டும். கைது செய்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.