districts

தீக்குழியில் விழுந்தவரை காப்பாற்றிய தீயணைப்பு துறை

சிதம்பரம், ஆக. 3-

    சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. அப்போது, ஒருவர் தீக்குழியில் குப்புற விழுந்து துடித்தார். அங்கு பணியில் இருந்து தீயணைப்பு துறையை சேர்ந்த முகமது சல்மான் நெருப்பில் இறங்கி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் எஸ்.ராஜா, நகர மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன் உள்ளிட்டவர்கள் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று வீரதீரச் செயலைப் பாராட்டினர்.