districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்   ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை விவசாய சங்க நிர்வாகிகளிடம் முறைதவறி நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் டி .ரவீந்திரன் தலைமையில்  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பலராமன், சிஐடியு நிர்வாகிகள் எம். வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப.செல்வன், ராமதாஸ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.