districts

சென்னை முக்கிய செய்திகள்

தேவநாதனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

சென்னை,ஆக.23- மயிலாப்பூரில் உள்ள  நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் விண் டிவி உரிமை யாளர்  தேவநாதனை 10 நாட்கள் காவலில்  எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு  அளிக்கப்பட்டடுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  144 முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம்  பெற்று மோசடி செய்ததாக, அந்நிதி  நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப் பட்ட தேவநாதன் உள்பட 3 பேரும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள  நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு ஆஜர்படுத்தபட்டு நீதி மன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட னர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வர்களை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என  பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், “இந்த வழக்கில் இன்னும் யாருக் கெல்லாம் நிதி சென்றுள்ளது, எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து  விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என  தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விரைவில்  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்

சென்னை, ஆக,23- சென்னை மாநகராட்சி யின் கீழ் இயங்கும் பள்ளி களில், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த, 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், விரிவாக்கத்திற்கு முன்பு இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 6.5 கோடி ரூபாயயை மாநகராட்சி  ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னையில் சமோசா சிங்  உணவகம் திறப்பு

சென்னை, ஆக. 23- தில்லியில் புகழ்பெற்ற  சமோசா சிங் துரித  உணவ கம் சென்னையில் அதன்  முதல் விற்பனை நிலை யத்தை எக்ஸ்பிரஸ் அவென்யூ  வணிக வளாகத் தில் திறந்துள்ளது. இந்த உணவகத்தில் கச்சோரி, சாட் அயிட்டம் முதல் நாவில் நீர் ஊறச் செய்யும் கிளாசிக் உணவு கள், தெருவோர கடைகளில்  விற்கப்படும்  உணவு வகை கள் என விதவிதமான சமோ சாக்கள் என ஏராளமான  உணவுகள் கிடைக்கும். ஒவ்வொரு வாடிக்கை யாளர்களுக்கும் ஒரு சுவை யான அனுபவத்திற்கு இது உத்தரவாதம் அளிக்கிறது. இங்கு, சென்னையின் உணவுப் பிரியர்கள் பாரம் பரிய ஆலு சமோசா முதல் உள்ளூர் பிரபலமான உண வுகள் வரை ருசித்து மகிழ லாம். 

புதிய இருசக்கர மின்வாகனங்கள் அமைச்சர்கள் அறிமுகம் 

சென்னை, ஆக. 23-  இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டியான் மின்வாகன நிறுவனம், அகஸ்டா  எஸ்.பி இ-ஸ்கூட்டர், அஸ்டா எஃப்.ஹெச். இ-ஸ்கூட்டர் என இரண்டு இருசக்கர மின்வாகன மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  புதிய வாகனங்களை  மாநில சிறு, குறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் அறிமுகப்படுத்தி புதிய ஷோரூமையும் திறந்து வைத்தனர்.  இந்த நிகழ்வில் வி.ஜி.பி குழும நிறுவனங்களின் தலைவர்  வி.ஜி. சந்தோஷம், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி பெங்களூரு ஏ.ஐ.ஓ.எஃப்.டி. வென்ச்சர்ஸ் லிமிடெடின்  இயக்குநர் பிரசாந்த் விஜயம்மா,  பவர்டிரான்ஸ் மொபிலிட்டி  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம். ஆண்டனி  தாமஸ், நிர்வாக இயக்குநர் ஏ. அனுஷா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அகஸ்டா எஸ்.பி. இ-ஸ்கூட்டர்  மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டும். அகஸ்டா எஸ்.பி. ஆனது  4.3 கி.வா. லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. 

அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை
பிஎஸ்என்எல்  தலைமை பொதுமேலாளர் தகவல்

கோவை,ஆக.23- தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங் களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர்  பனாவத் வெங்கடேஷ்வரலு  தெரிவித்தார். கோவையில் வெள்ளியன்று (ஆக.23) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 6,400 இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி இணைப்புகளை 4ஜி இணைப் புகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் 4ஜி வேகத் தில் இணையதள சேவை கிடைக்கும். 4 ஜி சேவை கொண்டுவரப்பட்டால், பி.எஸ்.என்.எல் இணையதள சேவை வேகம்  மேலும் அதிகரிக்கும். 10 எம்.பி.எஸ்  வேகத்தில் தற்போது சேவை வழங்கப்படு கிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 5ஜி சேவை கொண்டு வரப்படும். ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் இணையதள வேகம் சேவை பெறப்படும் நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல்-லுக்கு விரைவாக 4 ஜி  சேவை, அடுத்ததாக 5 ஜி சேவை வழங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் குக்கிராமங்கள் உள்ளிட்ட 24 ஆயிரத்து 680 இடங்களில், இதுவரை சேவை வழங்கப்படவில்லை. இதில், மத்திய  அரசின் அத்யோதயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 247 இடங்களில் சேவை வழங்கப் பட உள்ளது. அதில் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் நேரடியாக 4ஜி சேவை  வழங்கப்படவுள்ளது. இதற்காக இதுவரை 79 சைட்கள் ஆய்வு செய்து, 100 கிராமங் களுக்கு மேற்கண்ட சேவை அளிக்கப்பட் டுள்ளது. கோவையை பொறுத்தவரை ஆனைக்கட்டியில் உள்ள 5 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கியுள்ளோம். புதிய பயனாளர்கள் எண்ணிக்கை அதி கரிப்பு தற்போது பி.எஸ்.என்.எல்  பிரீ-பெய்டு சிம்-க்கான தேவை அதிகரித் துள்ளது. 4ஜி சேவை அறிவிப்பால் கடந்த  2 மாதத்திற்குள் குறிப்பாக, 4.5 லட்சம்  வாடிக்கையாளர்கள் புதியதாக இணைந்து ள்ளனர். இதில் 2 லட்சம் பேர் வேறு நிறுவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல்-க்கு மாறியுள்ளனர். பிஎஸ்என்எல்-லின் முக்கியமான திட்டமாக மாநில அரசு பள்ளிகளில் பிரத்யேக  திட்டத்தின் கீழ் கணினிமயமாக்கும் வகை யில், மொத்தம் உள்ள 30,296 அரசு பள்ளி களில் முதல்கட்டமாக 21, 659 அரசுப் பள்ளி களில் இணைப்பு சேவை வழங்கப்பட் டுள்ளது. மிகப்பெரிய சேவையான எஃப்.டி.டி.ஹெச் இணைப்பு சேவைக்காக 24 மணி  நேர ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட மையம்  திருச்சியில் 2 மாதத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு  அவர் கூறினார்.

விஐடியில் கலைஞர் நூற்றாண்டு  நிறைவு விழா

வேலூர், ஆக 23 - தமிழியக்கம், விஐடி மற்றும் பாவேந்தர்  பாரதி தாசன் தமிழ் மன்றம் சார்பில் வருகிற 26 ஆம் தேதி விஐடி அண்ணா அரங்கத்தில்  முத்தமிழறி ஞர் கலைஞர் நூற்றாண்டு  நிறைவு விழா நடைபெறு கிறது. தமிழியக்கத்தின் நிறு வன தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி,  மக்களவை உறுப்பினர் கனி மொழி கருணாநிதி, முரசொலி  செல்வம், வைர முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற் கிறார்கள். புகைப்பட கண்காட்சி இந்த நிகழ்ச்சியை யொட்டி, ஆக. 25 அன்று கலைஞர் வரலாற்று புகைப்பட கண்காட்சியை ஆர்.எஸ்.பாரதி திறந்து வைக்கிறார். ஆக. 26 வரை இந்த கண்காட்சி  நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பொது மக்கள் அனைவரும் காணலாம்.

மின்துறையை தனியார் மயமாக்கும்  ஆலோசனைக் கூட்டம் ரத்து

சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி!

புதுச்சேரி, ஆக. 23- ஒன்றியத்தில் மோடி தலைமையி லான பாஜக அரசு அமைந்ததும் புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டது.  அடுத்தக் கட்டமாக, மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதை அமல்படுத்தும் நடவடிக்கையில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு முனைப்பு காட்டியது. இதையடுத்து, புதுச்சேரி மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆரம்பம் முதல் மார்க்சிஸ் கட்சி கடிவாளம் போட்டது. மக்களை திரட்டி தொடர்ச்சியாக உறுதியான  போராட்டத்தை நடத்திய வந்தது. இதன் விளைவாக, ரேசன் கடைகளை திறப்பது என்று மாநில அரசு முடிவு செய்து. மேலும், அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் விடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆனாலும், மின்துறையை தனி யார்மய நடவடிக்கையை மட்டும் தொடர்ந்து கொண்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மின்சாரத்துறை ஊழியர்கள், பொறி யாளர்கள் கூட்டுப் போராட்டக் குழு அமைத்து தொடர்ந்து போராடி வரு கிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம், சிபிஐ, திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. மின்துறையை தனியார்மயக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக சென்று கையெழுத்து பெற்று 50 ஆயிரம் மனுக்களை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பின்னணியில் மின்துறை தனியார் மயமாக்கும் 51 : 49 என்ற விகிதாச்சார அடிப்படையில் தனியார்மய கொள்கையை அரசு முன் வைத்தது. மின்துறை ஊழியர்களும்,அரசியல் கட்சிகளும் அதை  ஏற்க மறுத்தன. மின் ஊழியர் அமைப்புகளின் போராட்டக் குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அரசின் தனியார்மயத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் தனி யாருக்கு மின் துறை ஏலம் விடும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனியார் மயத்துக்கு ஏதுவாக மின் துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்த நட வடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், நடப்பு சட்ட மன்ற கூட்டத் தொடரில் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கைவிடப்படும் என முதல்வர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்றும் மின்துறை தனியார் மயமாகாது என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். இந்த நிலையில், இது குறித்தான  ஆய்வுக் கூட்டத்திற்கு ஆக. 22 அன்று இணைய வழியில் நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது அதைத் தொடர்ந்து, மின்சார தனி யார் மயமாக்கும் நடவடிக்கை  ஆய்வுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், “இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் புதுச்சேரி மின்துறை அரசுத் துறையாகவே தொடர்ந்து நீடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எடுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.