சென்னை, நவ. 13- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் அமைப்ப தற்கான பணிகளை இம்மாதம் இறுதிக் குள் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரி வித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: முதலமைச்சரால் இந்த ஆண்டு மார்ச் 14ல் வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் 218 பணியில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தோம். கொளத்தூரில் இருக்கும் வண்ண மீன்கள் விற்பனை உரிமையாளர் மற்றும் தொழிலாளர் களுக்கு என்று சுமார் ரூ.54 கோடி செல வில் 20 ஏக்கர் பரப்பளவில் 138 கடை களுக்கான கட்டுமான பணியை முதல மைச்சர் தொடங்கி வைத்தார். அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தோம். அதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயனா வரம், யுனைடெட் காலனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தை பார்வையிட்டு அந்த நூலகத்தை மேம்படுத்துவதற் குண்டான ஆய்வு மேற்கொண்டோம். அதைத் தொடர்ந்து வடசென்னையில் சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்களுக்காகவும், பொரு ளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் மக்களுக்காகவும், அவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக இந்த இடத்தில் கூட்டுறவு பண்டகசாலை என்ற பெய ரில் இருக்கும் இந்த இடத்தில் சுமார் 776 வீடுகளுக்கான கட்டுமான பணி களை மேற்கொள்ள இருக்கிறோம். அதேபோல் வால்டாக்ஸ் ரோடு, வாட்டர் பேஷன் சாலை என்று கூறப் படும் தண்ணீர் தொட்டி தெருவில் 700 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் என்று ஒட்டுமொத்தமாக 1.476 குடி யிருப்புகளை கட்டமைக்கின்ற பணி களை இந்த மாத இறுதியில் முதல மைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த கட்டுமான பணி என்பது திட்டமிடப் பட்டபடி அடுத்த ஆண்டு 2025 டிசம்பர் மாதத்திற்குள் மக்களிடம் ஒப்படைப் பதற்குண்டான துரித நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம். நூல கங்களை புதுப்பிப்பதும், முதல்வர் படிப்பகம் என்ற பெயரிலே கோவொர் கிங் ஸ்டேஷன், படிப்பதற்கென்று ஒரு தளத்தையும், பணி செய்வதற்கென்று ஒரு தளத்தையும் உருவாக்குகிறோம். 12 நூலகங்கள் தரம் உயர்வு அந்த வகையில் வடசென்னை பகுதிக்குட்பட்ட துறைமுகம், வில்லி வாக்கம், எழும்பூர், திருவிக நகர், ராய புரம், ஆர் கே நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் 12 நூலகங்களை தரம் உயர்த்தவும், அவர்கள் படிப்பதற்குண் டான இன்டர்நெட் வசதியுடன் அரங்கு கள் அமைப்பதும், அதேபோல் கோவொர்கிங் ஸ்டேஷன்ஸ்-ல் கூட்ட ரங்கம் (Conference Hall) அமைப்ப தும், அவர்கள் பணி செய்வதற்குண் டான அனைத்து வசதிகள் ஏற்படுத்தி தரு வதையும் நோக்கமாகக் கொண்டு அந்த பணிகளையும் தொடர்ந்து செய்து வரு கிறோம். வடசென்னை மக்களுடைய அடிப் படை தேவைகளை முழு முயற்சியோடு நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வ மான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். அதேபோல் பாது காக்கப்பட்ட குடிநீர், கழிவு நீர் சீராக செல்வதற்குண்டான பாதைகள் போன்றவைகளும் இந்த திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.