விழுப்புரம், ஜூன் 20- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு விடுதியில் இடம் கிடைக்காமல் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கள்ளுக்கடை மூலை.
அங்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பின்புறம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிப்பதற்கு விடுதியில் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்கள் சிலர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க பெற்றோருடன் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அந்த மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
அந்த மனுவில், விழுப்புரம் மாவட்ட கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதற்கு 6,9,11 ஆம் வகுப்பு களில் படிப்பதற்கு விண்ணப்பம் செய்திருக் கிறோம். ஆனால், அரசு விடுதியில் தங்குவ தற்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து, 10 நாட்களுக்கும் மேலாக விடுதி நிர்வாகி களிடம் முறையிட்டும் அலை கழித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் விடுதியில் இடம் கிடைத்தால் மட்டுமே பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளது. எனவே, கல்வித்துறை உடனடியாக தலையிட்டு விடுதியில் தங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.