districts

சின்னசேலம் கல்லூரி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை

கள்ளக்குறிச்சி, ஆக.21-

     கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி யில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமார் ( வயது19) பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

     இது தொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

    உடலை வாங்க மறுத்த பெற்றோர், தன் மகனின் சாவுக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நட வடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை யினர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவ னின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

      இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து உண்மையை விசாரித்து பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் விசாரணை அதி காரியாக காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நியமித்து உத்தரவிட்டார்.  

     இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களிடமும், மாணவர்க ளிடமும், விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.