districts

img

மாங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மறியல்

ராணிப்பேட்டை, ஆக. 18 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், மாங்காடு ஊராட்சிக்குட்பட்ட லப்பை பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்,  100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும், லப்பப்பேட்டையில் புதிதாக நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் தற்காலிக ஒத்தி வைக்கப்பட்டது.