districts

குடிநீர் கேட்டு மறியல்

விழுப்புரம், மே 10- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட தாதிக்குளம் கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அந்த கிராம மக்கள் செஞ்சி மேல்மலையனூர் ஊரக நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். செவலபுரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாதிக்குளம் கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க சுமார் 14 வருடத்துக்கு முன்  சித்தாத்தூர் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு  பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தாழ்வான பகுதிக்கு மட்டும் குடிநீர் வருவதாக வும், மேடான பகுதிகளுக்கு நீர் வருவதில்லை என்று பொது மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் பழைய பைப் லைனை அகற்றி புதிதாக பைப் அமைத்து அனைத்து பகுதிகக்கும் சீராக  குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மலைய னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி புதிய பைப்லைன் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து  சென்றனர்.