சென்னை, மார்ச் 21- சென்னை கிண்டியில் ரூ.230 கோடி செலவில் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (மார்ச் 21) அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக் கப்படும்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித் திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு கட்டிடம் கட்ட ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக் கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்க ளுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 1000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப் படவுள்ள இந்த உயர்சிறப்பு மருத்துவ மனையில், இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிர்வீச்சு மற்றும் குறுக் கீட்டு கதிர்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவத்துறை, நோய் எதிர்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவத்துறை, சிறுநீரக மருத்துவத்துறை ஆகிய மருத்துவ உயர் சிறப்பு பிரிவுகளும், இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச் சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை ஆகிய அறுவை சிகிச்சை உயர்சிறப்பு பிரிவுகளையும் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ, வேலு, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் கே.கணபதி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர் கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.