புதுச்சேரி, ஜூன் 13-
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை மூலம் 2023-2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு கூறு திட்ட நிதி செலவின மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடி நலத்துறை செயலர் கேசவன், இயக்குநர் சாய்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புக்கூறு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு செலவிடும் வழிகள் குறித்தும் விவாதித்தனர். மேலும் சிறப்பு கூறு நிதிகள் வாயிலாக திட்டங்களுக்கு செலவிடும் 20 அரசு துறைகளின் அதி காரிகள் கலந்து கொண்டு இதுகுறித்து விவாதித்தனர்
இதில் துணை சபாநாயகர் ராஜவேலு, குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் விவ காரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பி னர்கள் அங்காளன், லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.