கிருஷ்ணகிரி, ஏப். 29- சாதி ஆணவப் படுகொலை களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. முன்னணியின் மாவட்டக் குழு கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் தலை மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சனிக்கிழமை (ஏப். 29) நடைபெற்றது. இதில், கிட்டம்பட்டியில் காதல் திரு மணத்திற்கு எதிராக பெண்ணின் தந்தை சங்கரால் நடத்தப்பட்ட ஜெகன் கொலை, ஊத்தங்கரை அருணபதியில் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக தந்தை தண்டபாணியே மகன் சுபாஷ், தாய் கண்ணம்மா கொலை, அஞ்செட்டி வட்டம் கோட்டையூரில் நடைபெற்ற திருவிழாவையொட்டி 12 தலித் மக்கள் மீது ஆதிக்க சாதி யினர் நடத்திய தாக்குதல் ஆகிய வற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல் துறையினரைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட சரண்யா, அனுசியாவுக்கு தாலா 25 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். சாதிய ஆணவ படுகொலை கள், தாக்குதல்கள், தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த சம்பவங்கள் மீது எஸ்சி, எஸ்டி ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 1999இல் ஆதி திராவிடர் நலத்துறையால் சாணமாவு, சென்னத்தூர் மக்க ளுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலம் மீதான வழக்கை விரைந்து முடித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திகிரி ஆதி திராவிட மக்க ளுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை யில் முறைகேடுகள், சூடு கொன்டப்ள்ளி, மிடிகரப்பள்ளி சுடுகாடு பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மே மாதம் இறுதி யில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தெரி வித்தார். இதில் சிபிஎம் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், முன்னணியின் மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, நிர்வாகிகள் சி.முத்து,சுரேஷ், நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.