districts

தந்தையை கொலை செய்த மகன் கைது

சென்னை, மார்ச் 17- சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த வர் செல்வம் (55). இவரது  இரண்டாவது மகன் நித்யானந்தன் (20). ஏசி  மெக்கானிக்கான நித்யானந் தனுக்கு அதிகமாக மது போதைப் பழக்கம் இருந்துள்ளது.மேலும் நித்யானந்தம் மது போதையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் புதன்கி ழமை இரவு மதுபோதையில் நித்யானந்தன், தந்தை செல்வத்திடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நித்யானந்தன் தான் வைத்திருந்த கத்தி யால் செல்வத்தை குத்தி யுள்ளார். இதில் செல்வம்  பலத்தக் காயமடைந்து, மயங்கி விழுந்ததும் நித்யானந்தன் தப்பி ஓடி விட்டார். இதில் பலத்தக் காயமடைந்த தந்தை செல்வத்தை மூத்த மகன் பிரகாஷ் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு அனுமதிப்பட்ட சிறிது  நேரத்தில் செல்வம் இறந்தார்.  இது குறித்து சூளைமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறை வாக இருந்த நித்யானந்தனை வியாழக்கிழமை கைது செய்தனர்.