districts

img

காலமானார்

சென்னை, மார்ச் 20 - தீக்கதிர் நாளிதழ் முன்னாள் ஊழியர் எஸ்.எம்.எஸ்.சங்கர் செவ்வாயன்று (மார்ச் 19) காலமானார். அவருக்கு வயது 51. சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ச. லெனின், ம. சித்ரகலா, டி.சுந்தர், சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன், மாதர் சங்க மாவட்ட பொரு ளாளர் ஜெ.ஜூலியட், கிளைச் செயலாளர்கள் எப்.ஜெரோம், பொன்னம்பலம், தீக்கதிர் சென்னை பதிப்பு பொதுமேலாளர் உஷா, மூத்த தலைவர்கள் சி.கல்யாண சுந்தரம், க.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புதனன்று (மார்ச் 20) கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெற்றது.