districts

img

வடசென்னை இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

சென்னை, நவ. 4- “வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்”  ஒரு பகுதியாக சென்னை நம்மாழ்வார் பேடை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும்  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்”  அமைக்கப்படவுள்ளது. வடசென்னை இளைஞர்களின் திறன்  பயிற்சிக்காகவும் மற்றும் கூடுதல் வசதிகளை  மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப்படும் இந்த மையத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு  சனிக்கிழமை (நவ.4) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் தேவை யான அனைத்து கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகள், மாணவர்கள் பயி லும் வகுப்பறைகளை மேம்படுத்துதல், அதற்குண்டான உபகரணங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழில் பயிற்சிக்காக திறன் மேம்பாட்டு  மையம் சார்பில் தையல் பயிற்சியும், கணினி  பயிற்சியும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இங்கு தொடங்குவதற்கு கல்லூரி முதல்வர் உறுதியளித்திருக்கிறார். வறுமைக் கோட்டிற்கு கீழே அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பயனுள்ள ஒரு  செயலாக இது அமையும் என்ற நம்பிக்கை யோடு இருக்கிறோம். இங்கு தொழில்  பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி முடித்த வுடன் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கபட உள்ளது.  ஆய்வின் போது  சென்னை மாநகராட்சி  மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற  உறுப்பினர் தாயகம் கவி,  மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், கல்லூரி முதல்வர் பெ.பவானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.