சென்னை, நவ.23- சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் நிறுவனர் தின விழா சிறந்த மாணவர்கள் மற்றும் சிறப்பாக பணி யாற்றிய பேராசிரியர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிமாட்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் என்.எம்.வீரயைன், இந்த வளர்ச்சியும் நற்பெயரும் ஒரே நாளில் உருவானதில்லை. கடினமான உழைப்பு இதன் பின்னணியில் உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி சுகிசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கல்வித் துறையில் சிறந்து விளங்கிய 491 பேருக்கும், சிறந்த மாணவர்கள் 25 பேருக்கும், ஆராய்ச்சிக்காக 53 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. 1172 மாணவர்கள் மற்றும் 700 பேராசிரியர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.