வேலூர், டிச.23- வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், பள்ளத்தூரில் இருந்து குடியாத்தம் வரை தடம் எண் 23 அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து சேவையை பள்ளத்தூர், மாளியபட்டு காளாம்பட்டு, செஞ்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். மேலும் குடியாத்தத் திற்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள் பல்வேறு வேலைகளுக்காக குடியாத்தம் செல்பவர் களும் மற்றும் கே.வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்ல இப்பேருந்து சேவையையே நம்பி உள்ளனர். இந்த ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அதில் ஏற்படும் கூட்ட நெரிசலால் பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த தடத்தில் நெரிசல் நேரத்தில் கூடு தலாக பேருந்து இயக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பொது மக்களிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. அந்த கோரிக்கை மனுவை அரசு போக்கு வரத்து கழக மேலாளரிடம் (வணிகம்) வாலிபர் சங்கம் தாலுகா செயலாளர் எல்.நவீன் ஆகியோர் அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.