districts

img

அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை கோவில் நிலங்களில் குடியிருப்போர் சங்கம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 12 - வாடகை வசூல் என்ற பெயரில் அராஜகமாக செயல்படுவதை கண்டித்து மார்ச் 18 அன்று சென்னை யில் உள்ள அறநிலை யத்துறை ஆணையர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாடு வெள்ளி யன்று (மார்ச் 11) கிண்டி யில் நடைபெற்றது. சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பி னர் மு.நடராசன் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில அமைப் பாளர் சாமி.நடராஜன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் நீண்ட காலமாக மக்கள் குடியி ருந்தும், சாகுபடிசெய்தும், கடைகளை நடத்தியும் வரு கின்றனர். இந்த நிலங்க ளுக்கு கடந்த காலங்களில் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப் படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் பல்வேறு அறி விப்புகளை வெளியிடுகிறார். துறையின் ஆணையர், அறிநிலையத்துறையின் சட்டங்களை மீறி, வாடகை பாக்கி உள்ளவர்களின் அசையும் சொத்துக்களை ஏலம் விடுவோம் என்று  உத்தரவுகளை வெளியிடு கிறார். பல லட்சம் ரூபாய்   வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்று சம்மன் அனுப்புகின்றனர்.

பாக்கியை உடனடியாக செலுத்த தவறினால் வீடுகளுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கோவில் நிலங்களை பயன்படுத்துவோருக்கு புதிய வாடகையை நிர்ண யிப்பதற்கு தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள் ளது. அந்தக்குழு கட்டணம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அமைச்சரும், ஆணையரும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது ஏற்புடையதல்ல. இதனைக் கண்டித்து மார்ச் 18ந் தேதி அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும். இந்தப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி, சங்கத்தின் மாநில நிர்வா கிகள் நெ.இல.சீதரன், இரா.ஜெயராமன், வ.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசி னார். இந்த மாநாட்டில் தென் சென்னை மாவட்டத் தலைவ ராக எஸ்.வெள்ளைச்சாமி, செயலாளராக மு.நடராசன், பொருளாளராக சி.ரவி கிருஷ்ணா ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.