districts

கோயம்பேடு சந்தையில் இன்று கடைகள் அடைப்பு

சென்னை, மே 4- வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் வியாழனன்று (ஏப்.4) கடைகள் அடைக் கப்பட்டிருக்கும் என்று   வணிகர்கள் அறிவித்துள்ள னர். மலர் சந்தையில்  மொத் தம் உள்ள 430 கடைகளும் வழக்கம் போல இயங்கும் என்று வியாபாரிகள் தெரி வித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் சுமார் 4ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், மலர் மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாகவும், சில்லரை யாகவு2ம் வியாபாரிகள் விற்பனை செய்து வரு கின்றனர். இந்த நிலை யில் நாளை (5ந்தேதி) வணிகர் தினம் கொண்டா டப்படுகிறது. இதை முன் னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல் பட்டு வரும் வியாபாரிகள் சங்கங்கள் ஏற்கனவே கடை களுக்கு விடுமுறை அறி வித்து உள்ளன. கோயம்பேடு சந்தை யில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் வியாழனன்று  கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் கார ணமாக காய்கறி மார்க் கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழச் சந்தையில் உள்ள 130 மொத்த விற்பனை கடை களுக்கும், அதே போல மளிகை சந்தையில் உள்ள  பெரும்பாலான கடைக ளுக்கும் வியாபாரிகள் விடுமுறை அறிவித் துள்ளனர். அதே நேரத்தில் அத்தி யாவசியப் பொருட்கள் மற்றும் அழுகும் பொருட் கள் என்பதால் பூ, காய்கறி, பழம் மற்றும் மளிகை சந்தை யில் உள்ள ஒரு சில கடைகள்   வழக்கம் போல செயல்படும் என்றும் வியாபாரிகள் சிலர் அறிவித்துள்ளனர்.