கடலூர் மாவட்ட பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்திடுக மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை
கடலூர்,செப்.15 - கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பாசன வசதிக்காக கூடுதலாக 5000 கன அடி தண்ணீர் கல்லனையி லிருந்து திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது. சிதம்பரம் பகுதியில் விவசாய சாகுபடி பணிகள் நடை பெற்று வருகின்றன. கல்லனையிருந்து தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருப்பதால் சாகுபடி தேவைக்கு போதுமான தாக இல்லை. எனவே ஓரு வார காலத்திற்காவது 5,000 கன அடி தண்ணீர் கூடுதலாக திறந்து விட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் 1300 வழக்குகளுக்கு தீர்வு
கடலூர், செப்.14- கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) விஜயகுமார், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதிகள் வித்யா, ஆனந்தன், லஷ்மி ரமேஷ், பிரகாஷ், நாக ராஜன், அன்வர் சாதத் , பத்மாவதி, வனஜா ஆகி யோர் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்கு கள், ஜீவணாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்கு கள், பண மோசடி வழக்கு கள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத் தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி மற்றும் குறிஞ்சிப்பாடி நீதி மன்றங்களில் அந்தந்த நீதி மன்ற நீதிபதிகள் முன்னி லையில் நடைபெற்றது. இதில் 12 அமர்வுகள் மூலம் சுமார் 4,538 வழக்கு கள் விசாரனைக்கு எடுத்துக் கெள்ளப்பட்டு 1300 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.35,01,34,527/- தொகைக்கு உத்திரவிடப் பட்டது.