வண்டலூர்,அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் காட்டாங்குளத்தூர் வண்ட லூர் பகுதி மாநாடு ஓட்டேரி விரிவு பகுதி, வண்டலூரில் சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை கிளை செயலாளர் பாண்டுரங்கன் ஏற்றிவைத்தார். அஞ்சலி தீர்மானத்தை பகுதிக்குழு உறுப்பினர் எம்.வெங்கடேசன் வாசித்தார். பகுதிக்குழு உறுப்பினர் டி.நடராஜன் வரவேற்றார். செயலாளர் அறிக்கையை பகுதி செயலாளர் கே.சேஷாத்திரியும் வரவு செலவு அறிக்கையை பகுதிக் குழு உறுப்பினர் கே.செல்வராஜூம் தாக்கல் செய்தனர். மாநாட்டை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பா. ஜான் சிராணி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. புருஷோத்தமன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டை முடித்துவைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சங்கர் பேசினார். திருநாரா யணன் நன்றி கூறினார். இந்த மாநாட்டில் காட்டாங்குளத்தூர் வண்டலூர் பகுதி குழு காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு மற்றும் வண்டலூர் வட்ட குழுவாக பிரிக்கப்பட்டது. காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு செயலாளராக எம். வெங்கடேசன் வண்டலூர் வட்டக் குழுவின் செயலாளராக கே. சேஷாத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வண்டலூர் பகுதியில் ஒரு அரசினர் கலை அறிவியல் கல்லூரியை அமைத்திடவேண்டும், மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்திட வேண்டும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட வேண்டும், மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பகுதிநேரக் கிளை நூலகங் களை முழுநேர நூலகங்களாக மேம்படுத்தி அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.