சென்னை, மார்ச் 8- சென்னை தண்டலத்தில் உள்ள சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் பொறியியல் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஒன்றிய அரசின் உள்கட்டமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர் பிரதிஷ்தா பாண்டே நேரில் ஆய்வு மேற்கொண்டார். இக்கல்லூரியில் உள்ள ரோபோட்டிக்ஸ் ஆய்வகம், ட்ரோன் ஆய்வகம், 3டி பிரிண்டிங் ஆய்வகம் மற்றும் மாண வர்கள் தங்களின் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகளுக்கான திட்டங்களை வெளிப்படுத்தும் புரோடைப் ஆய்வகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அவை சிறப்பாக செயல்படுவது குறித்து பாராட்டினார். சிமாட்ஸ் கல்வியியல் இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசுவாமி, கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் மற்றும் துணை வேந்தர் டாக்டர் சதாராம் சிவாஜி ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.