புதுச்சேரி,ஜன.2- புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 2024-25 கல்வி யாண்டிற்கான மண்டல அறிவியல் கண்காட்சி ஏம்பலம் பி.எம்.ஸ்ரீ மறை மலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி யில் வியாழக்கிழமை துவங்கியது. கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக முதல மைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு அறிவி யல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பி னர் லட்சுமி காந்தன், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். அறிவியல் கண்காட்சியில் மொத்தம் 383 அறிவியல் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளி கள் 230 ம், தனியார் பள்ளிகள் 153 அறிவி யல் படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ள னர். இக்கண்காட்சியில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், தேசிய புத்தக அறக்கட்டளை,அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகிய துறைகளின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.