சென்னை, மார்ச் 2- சுயசார்பு பொருள தாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் ஆண்டு களில் கனரக இயந்திரங் களின் இறக்குமதியை படிப் படியாகக் குறைக்க இந்திய நிலக்கரி நிறுவனம் (சிஐஎல்) திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய நிலக்கரித்துறை செயலா ளர் அம்ரித்லால் மீனா கூறினார். இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சுரங்க இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனங்களின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், உலகளாவிய போட்டிகளை எதிர்கொள் வதே இந்தியாவின் தற்சார்பு கொள்கை என்றார். கனரக நில ஊர்தி இயந்திரங்கள் மற்றும் நிலத்தடி சுரங்க இயந்திரங் களைத் தயாரிப்பதில் உள்நாடு மற்றும் வெளி நாட்டு உற்பத்தியாளர்கள் வழங்கும் மகத்தான திறனை வெளிப்படுத் துவ தாக கூறினார். மேக் இன் இந்தியா என்பது, உள்நாட்டு தயாரிப்புகளின் உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாடு, ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்க மாகக் கொண்ட அரசின் முயற்சியாகும். இந்தக் கொள்கையானது, முதலீடு களை ஈர்ப்பது, உள்கட்ட மைப்பை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு துறை களில் வெளிநாட்டு மூலதனத் திற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகிய வற்றில் கவனம் செலுத்து கிறது என்றும் மீனா கூறினார். வேலைவாய்ப்பை அதிகரிப்பது, திறன்களை மேம்படுத்துவது மற்றும் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான “உலகளாவிய முன்னணி மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவது என்பதே இலக்கு என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் எல்எல்சி நிறுவன தலைவர் பிரசன்ன குமார் உள்பட ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவன உயர்அதிகாரி கள் கலந்து கொண்டனர்.