சென்னை, ஆக.20-
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பொது குழாய் மூலம் வழங்கும் குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு குடிநீர் அளவு மானி பொருத்த அதி காரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 85 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் சொந்த குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பைப்லைன் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படு கிறது. குறிப்பாக புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம் பாக்கம் ஏரி ஆகியவற்றிலும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற் கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. ஆனால், பருவமழையை பொறுத்து உரிய காலத்தில் இந்த தண்ணீர் பெறுவதில் சிக்கல் உள்ளது. இவற்றை தவிர வடசென் னைக்கு வடக்கில் மீஞ்சூரிலும், தென் சென்னைக்கு தெற்கில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக் கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் குடிநீர் பெறப்படு கிறது.
தற்போது, குடியிருப்புகள், நிறுவனங்கள் என 8 லட்சத்து 42 ஆயிரம் குடிநீர் இணைப்புகளை சென்னை குடிநீர் வாரியம் வழங்கி யுள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோ கம் செய்யப்படுகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 1000 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய ரூ43ம், ஏரிகளில் உள்ள நீரை சுத்தி கரித்து, அவற்றை வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வரை 1000 லிட்டருக்கு ரூ 25ம் செலவாகி றது. ஆனால், சென்னை குடிநீர் வாரியம் இதுநாள் வரை எவ்வளவு நீரைப் பயன்படுத்தினால் குடி யிருப்புகளின் மாதம் ரூ 84 மட்டுமே கட்டணம் வசூலிக்கிறது.
பல வீடுகளில் குடிநீர் சிக்கன மாக பயன்படுத்துவதில்லை. இதனால் மாநகரின் குடிநீர் ஆதாரம் விரைவாக காலியாகிறது. உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. எனவே, குடிநீர் வீணாக்கப்படுவதை தடுக் கும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் அளவு மானி பொருத்த திட்ட மிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கள் கூறுகையில், ‘‘குடிநீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவை கணக்கிட, அனைத்து வணிக கட்டிடங்கள், குடியிருப்பு பகுதி களில் மேம்பட்ட அளவுமானி பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த ஆவணங்களை தயாரித்து வருகிறோம். வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அளவு மானிகளை பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தற்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் அளவில்லாத நீர் விநியோகத்தை பெறுகின்றனர். ஒவ்வொரு குடி யிருப்பு எவ்வளவு நீரைப் பயன் படுத்தினாலும், ஒரு மாதத்துக்கு நிலையாக ரூ 84 செலுத்துகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வணிக மற்றும் அதிக அளவு குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு சுமார் 21 ஆயிரம் அளவு மானிகள் பொருத்தப் பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனை களுக்கு 500 கிலோ லிட்டர் வரை (ஒரு கிலோ லிட்டர் என்பது 1000 லிட்டர்) ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 114, கல்வி நிறுவனங்களுக்கு ரூ 94, பிற நிறுவனங்களுக்கு ரூ 81 கட்ட ணமாக வசூலிக்கப்படுகிறது.
படிப்படியாக அனைத்து அடுக்கு மாடி, வணிக பிரிவுகளிலும், குடி யிருப்பு பகுதிகளில் அளவு மானிகள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.’’ என்றனர்.