கிருஷ்ணகிரி,ஜன.7- ஓசூர் ‘செஸ் செண்டர்’ சார்பில் சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் வணங்காமுடி தலைமையில் அனைவருக்குமான சதுரங்க போட்டி நடைபெற்றது. சாமுவேல், ஞானப்பிரகாசம், மாதவன், அண்ணாதுரை ஆகியோர் மேற்பார்வை இந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் இரு பிரிவுகளிலும் 40 பேர் கலந்து கொண்டனர். 7 சுற்றாக நடந்த போட்டியில் 1 முதல் 10 வரை இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.