சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், எக்ஸ்னோரா அமைப்பும் இணைந்து இரண்டாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னை பெருங்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.மெய்யநாதன், சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதர் ஒலெக் அவ்தீவ், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி 14ஆவது மண்டலக் குழு தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.செந்தூர் பாரி (எக்ஸ்னோரா) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் செவிலியர் கல்லூரி மாணவர்களும் மரக் கன்றுகளை நடும் இயக்கத்தில் கலந்துகொண்டனர்.