சூளகிரி, மே 18-
மும்பையை சேர்ந்தவர் மணிமாறன். பிரபல தனியார் நிறுவன அதிகாரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதி யிலுள்ள கடைகளில் ஆய்வு மேற் கொண்டார். அதில் பிரபல நிறு வனத்தின் பெயரில் கலப்பட டீத்தூள் மற்றும் சோப்புதூள் உள்ளிட்டவை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதுகுறித்து சூளகிரி காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 4 கடைகளில் இருந்தும் ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள டீத்தூள், சோப்புத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
இதுதொடர்பாக காமராஜ் நகரை சேர்ந்த கவுதம்ராஜ் (24), சிவா (23), ஏனுசோனை முனிராஜ் (44), அட்டரகானப் பள்ளி நாகராஜ் (38) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.