பொன்னேரி,அக்.9- பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான மாண வர்கள் சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அவர்கள் தினந்தோறும் மின்சார ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். பயணி களை அச்சுறுத்தும் வகை யில் சிலர் பட்டாக்கத்தி களை மின்சார ரயில்க ளில் தொங்கியபடி நடை மேடையில் உரசியபடி செல்லும் சம்பவமும் அடிக்கடி அரங்கேறுகிறது. காவல்துறை மாணவர்களை எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்தும் இது குறையவில்லை. இதற்கிடையே மீஞ்சூர் அருகே மின்சார ரயிலில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடை மேடையில் உரசியபடி செல்வது தற்போது மீண்டும் நடந்து உள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரு கிறது. அவர்கள் கத்தி வாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலையங்களின் நடை மேடையில் மின்சார ரயில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடை மேடையில் உரசி செல்கின்றனர். இதனை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பி உள்ளார். மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் ரகளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.