சென்னை, செப். 19- திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ராமநாதபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி செவ்வாயன்று (செப். 19) துவங்கியது. திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டுக் குட்பட்ட ராமநாதபுரத்தில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக போடப் படாமல் இருந்தன. இந்நிலை யில் அண்மையில் நடை பெற்ற கூட்டத்தில் ராமநாத புரத்தில் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன் முதல் கட்டமாக 2, 3, 4 மற்றும் 10ஆவது தெருவில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கி யது. இதில் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், மண்டல அலுவலர் நவிந் திரன், செயற்பொறியாளர் பாபு. உதவி செயற் பொறி யாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் கோதண்ட ராமன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் வெங் கட்டையா, அலமேலு, குமார், கிளைச் செயலாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.