சென்னை, செப். 30- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4 ஆவது வார்டில் மேலும் மூன்று பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. திருவொற்றியூர் 4 ஆவது வார்டில் 22 தார் சாலைகள் அமைக்கப்படும் என மண்டல குழு கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது. இந்நிலையில் மகா லக்ஷ்மி நகர் 3ஆவது தெரு, முல்லை நகர் முதல் தெரு, திருவீதியம்மன் நகர் 5 ஆவது குறுக்கு தெரு ஆகிய தெருக்க ளில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி வெள்ளியன்று (செப். 29) துவங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெய ராமன், செயற்பொறியாளர் பாபு, மகா லட்சுமி நகர் தலைவர் கதிர்வேல், செய லாளர் மணிகண்டன், பொருளாளர் குப்பன், முல்லை நகர் தலைவர் கோபால கிருஷ்ணன், செயலாளர் பழனிசாமி, ஜனார்த்தனன், கண்ணியாலால் லே அவுட் தலைவர் சடகோபன். சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.