districts

img

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்கீரனுார் கிராமத்தில் 9வது வார்டு பகுதியில் 120 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு  கடந்த ஒரு வாரமாக போதுமான அளவு குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி – விளம்பார் சாலையில் ராஜீவ்காந்தி நகர் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.