districts

img

எழுச்சிமிகு மேதின பேரணி

சிஐடியு, ஏஐடியுசி வட சென்னை மாவட்டக் குழு சார்பில் 136ஆவது மே தின பேரணி பெரம்பூர் எம்.கே.பி. நகரில் நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் துவக்கி வைத்தார்.  பி.என்.உண்ணி, வி.குப்புசாமி (சிஐடியு), எஸ்.குப்பன், எம்.எஸ்.மூர்த்தி (ஏஐடியுசி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை சிஐடியு மாவட்ட தலைவர் சேஷாத்ரி தலைமையில் நடைபெற்ற மே தின பேரணி பொதுக்கூட்டத்தில் ஏஐடியுசி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சி.ஆர்.ரவீந்திரநாத், சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


தென் சென்னை மாவட்டத்தில் சிஐடியு ஏஐடியுசி சார்பில் 136வது மேதினப் பேரணி ஞாயிறன்று (மே 1) சைதாப்பேட்டையில் தொடங்கி தி.நகர் வரை நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்,


136வது மே தினமான ஞாயிறன்று (மே 1) திரிசூலம், அம்மன் நகரில்  தோழர் எம்.பாண்டியன் நினைவு கல்வெட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் திறந்து வைத்தார். கிளைச் செயலாளர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.நடராஜன், வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.