districts

img

நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்குக

கடலூர், டிச.7- சிறுபான்மையினர் மாண வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதற்கு சிறுபான்மை மக்கள் நல குழு மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் கடலூர் மாவட்ட 4 ஆவது  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜே. அப்துல் ஹமீது தலைமை தாங்கி னார். மாநில துணைத் தலை வர் மூசா துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் வி. உதயகுமார் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநாட்டை நிறைவு செய்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் முன்னாள் மாநிலத்  தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் ஜெயக்குமார், கிறிஸ்டோபர், அப்துல் வஹாப், எம்.மருதவாணன், ஆர்.அமர்நாத், ஜே.ரா ஜேஷ் கண்ணன் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். ஜே. அப்துல் காதர் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் இம்மாநாட்டில் மாவட்டத் தலைவராக எஸ்.கே.பக்கீரான், செய லாளராக வி.உதயகுமார், பொருளாளராக எஸ்.எஸ்.ராஜ் ஆகியோர் நிர்வாகி களாக தேர்வு செய்யப் பட்டனர். தீர்மானங்கள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். முஸ்லிம்-கிறிஸ்தவர் கள் பட்டா இடங்களில் மசூதி, தேவாலயங்கள் கட்டுவதற்கு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.