districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு

சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வியாழனன்று (மார்ச் 24) முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். சரவணசெல்வி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜே.ஜூலியட், துணைத் தலைவர் பிச்சையம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.