districts

img

சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், அன்பு ஜோதி ஆசிரமம் விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.17) மாநிலம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் மேற்கு முகப்பேரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மா.சித்ரகலா, துணைத்தலைவர் பிச்சையம்மாள், மதுரவாயல் பகுதி செயலாளர் கவிதா, பொருளாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். 


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் அமைந்தகரையில். மாவட்டத் தலைவர் சாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவொற்றியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் கஸ்தூரி தலைமை தாங்கினார். மாதர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.