திருவள்ளூர்,ஆக.3-
திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
திருவள்ளூரில் குறுகிய சாலைகளே உள்ளன. அதுவும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நடைபாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் இதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள ஜெ.என் சாலை, சி.வி. நாயுடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த நிலையில் திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதாக கூறி அகற்றினர்.